பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

தமிழ்நாட்டில் சிவகங்கையில் நேரிட்ட சாலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் இரங்கல்

प्रविष्टि तिथि: 01 DEC 2025 10:23AM by PIB Chennai

தமிழ்நாட்டில் சிவகங்கை மாவட்டத்தில் நேரிட்ட சாலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் அவர் விருப்பம் தெரிவித்துள்ளார்.

உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என்று பிரதமர் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:

“தமிழ்நாட்டில் சிவகங்கையில் நேரிட்ட சாலை விபத்தில் உயிரிழப்பு ஏற்பட்டது மிகவும் கவலை அளிக்கிறது. எனது எண்ணங்கள் தங்களது அன்புக்குரியவர்களை இழந்தவர்களுடன் உள்ளது. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய நான் பிரார்த்திக்கிறேன்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.2 லட்சமும் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும்”.

***

(Release ID: 2196736)

SS/IR/LDN/RJ


(रिलीज़ आईडी: 2196876) आगंतुक पटल : 15
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Bengali , Assamese , Punjabi , Gujarati , Telugu , Kannada , Malayalam