iffi banner

ஐஎஃப்எஃப்ஐ: கோமாவில் இருந்தபோது பெற்ற அனுபவங்களிலிருந்து பிறந்த திரைப்படம்

கோவாவில் நடைபெற்று வரும் இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (ஐஎஃப்எஃப்ஐ), திரைப்பட இயக்குநர் ஹரோல்ட் டொமினிகோ ரோஸ்ஸி தனது பெஸ்கடோர் திரைப்படத்தின் உருவாக்கம் குறித்து கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்இது மருத்துவ ரீதியாக தூண்டப்பட்ட கோமாவில் இருந்தபோது அவர் பெற்ற அனுபவங்களிலிருந்து உருவான ஒரு படைப்பு, என்றார். "அந்த கடினமான காலகட்டத்தில், நான் தொடர்ந்து கடல்களைப் பார்த்தேன். தனிமை உணர்வு மிகப்பெரியதாக இருந்தது," என்று அவர் செய்தியாளர்  சந்திப்பின்போது தெரிவித்தார். தயாரிப்பாளர் பார்பரா அன்னே ரசீல் மற்றும் ஒளிப்பதிவாளர் மற்றும் தயாரிப்பாளர் ஐசக் ஜோசப் பேங்க்ஸ் ஆகியோரும் அவருடன் இருந்தனர்.

"அந்த உணர்ச்சிபூர்வமான தூரத்தையும், தொடர்புக்கான ஏக்கத்தையும் திரையில் காட்சிப்படுத்த பெஸ்கடோர் எனது வழியாக மாறியது", என்று  ரோஸ்ஸி கூறினார். கடலில் படமெடுப்பதில் இருந்த சவால்களை நகைச்சுவையுடன் அவர் நினைவு கூர்ந்தார். "வரலாற்றில் உள்ள ஒவ்வொரு திரைப்படத் தயாரிப்பாளரும் எச்சரிக்கிறார்கள்: படகில் படம் எடுக்காதீர்கள் என்று. நான் கேட்கவில்லை," என்று அவர் தெரிவித்தார். "ஆனால் அவர்கள் ஏன் அப்படிச் சொல்கிறார்கள் என்பதை நான் விரைவில் உணர்ந்தேன். திறந்த கடலிலும், அடர்த்தியான காட்டிலும் உண்மையான மீனவர் படகுகளில் படப்பிடிப்பு நடத்துவது நம்பமுடியாத ஒன்றாக இருந்தது. ஆனால் அதனால் ஏற்பட்ட நம்பகத்தன்மை அதன் மதிப்பை பெருமளவு உயர்த்தியது”, என்று அவர் குறிப்பிட்டார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2192962  

***

AD/RB/RJ


Great films resonate through passionate voices. Share your love for cinema with #IFFI2025, #AnythingForFilms and #FilmsKeLiyeKuchBhi. Tag us @pib_goa on Instagram, and we'll help spread your passion! For journalists, bloggers, and vloggers wanting to connect with filmmakers for interviews/interactions, reach out to us at iffi.mediadesk@pib.gov.in with the subject line: Take One with PIB.


Release ID: 2193279   |   Visitor Counter: 4