பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

தேவ் தீபாவளியையொட்டி பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

இடுகை இடப்பட்ட நாள்: 05 NOV 2025 10:16PM by PIB Chennai

தேவ் தீபாவளியையொட்டி பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். பாபா விஸ்வநாதரின் புனித நகரம் இன்று தேவ் தீபாவளியின் ஒப்பற்ற பிரகாசத்துடன் ஒளிர்கிறது. கங்கை அன்னையின் கரையில், காசியின் மலைத்தொடர்களில் ஏற்றப்படும் லட்சக்கணக்கான விளக்குகள் அனைவருக்கும் மகிழ்ச்சி மற்றும் செழுமையை ஏற்படுத்த தாம் வாழ்த்துவதாக” திரு மோடி கூறியுள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது: “பாபா விஸ்வநாதரின் புனித நகரம் இன்று தேவ் தீபாவளியின் ஒப்பற்ற பிரகாசத்துடன் ஒளிர்கிறது. கங்கை அன்னையின் கரையில், காசியின் மலைத்தொடர்களில் ஏற்றப்படும் லட்சக்கணக்கான விளக்குகள் அனைவருக்கும் மகிழ்ச்சியையும், செழிப்பையும் ஏற்படுத்த வாழ்த்துகின்றன. இந்த தெய்வீகமும், மகத்துவமும் உண்மையில் அனைவரது மனதையும் ஆன்மாவையும் ஈர்க்கும்.

உங்கள் அனைவருக்கும் தேவ் தீபாவளியின் மனமார்ந்த வாழ்த்துக்கள். ஹர் ஹர் மகாதேவ்!"

***

(Release ID: 2186792)

SS/IR/AG/KR


(வெளியீட்டு அடையாள எண்: 2186869) வருகையாளர் எண்ணிக்கை : 21