பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

தமிழ்நாட்டின் கரூரில் நடந்த அரசியல் பேரணியின்போது நிகழ்ந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து இழப்பீட்டுத் தொகையை பிரதமர் அறிவித்தார்

Posted On: 28 SEP 2025 12:03PM by PIB Chennai

தமிழ்நாட்டின் கரூரில் நடந்த அரசியல் பேரணியின்போது நிகழ்ந்த  துரதிர்ஷ்டவசமான சம்பவத்தில் உயிரிழந்த  ஒவ்வொருவரின் குடும்பத்தினருக்கும் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து ரூ. 2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று அறிவித்துள்ளார். காயமடைந்தவர்களுக்கு ரூ. 50,000 வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள சமூக ஊடக எக்ஸ் தளப்பதிவில் கூறியிருப்பதாவது;

தமிழ்நாட்டின் கரூரில் நடைபெற்ற அரசியல் பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட துயரச் சம்பவத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு பிரதமர் தேசிய நிவாரண நிதியிலிருந்து (PMNRF) ரூ.2 லட்சமும், காயமடைந்தோருக்கு ரூ.50,000மும் நிவாரணமாக வழங்கப்படும் என பிரதமர் திரு நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

*****

Release ID:( 2172381)

SS/PKV/SG

 


(Release ID: 2172389) Visitor Counter : 14