பிரதமர் அலுவலகம்
ஆயுஷ்மான் பாரத் திட்டம் கடந்த 7 ஆண்டுகளில் அனைவருக்குமான சுகாதாரப் பாதுகாப்பில் ஏற்படுத்திய மாற்றம் குறித்தக் கட்டுரையைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்
Posted On:
23 SEP 2025 1:15PM by PIB Chennai
ஆயுஷ்மான் பாரத் திட்டம், கடந்த ஏழு ஆண்டுகளில் அனைவருக்குமான சுகாதாரப் பாதுகாப்பு என்ற வாக்குறுதியிலிருந்து மக்கள் இயக்கமாக உருவெடுத்துள்ளதை விளக்கும் மத்திய அமைச்சர் திரு ஜகத் பிரகாஷ் நட்டா எழுதிய கட்டுரையைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.
பிரதமர் தனது எக்ஸ் சமூக ஊடக பதிவில் கூறியிருப்பதாவது:
“7 ஆண்டுகளில் ஆயுஷ்மான் பாரத் திட்டம் அனைவருக்குமான சுகாதாரப் பாதுகாப்பு என்ற வாக்குறுதியிலிருந்து ஒரு மக்கள் இயக்கமாக உருவெடுத்துள்ளது.
மக்கள் ஒவ்வொருவரின் நல்வாழ்வைப் பாதுகாப்பதில் அரசின் அர்ப்பணிப்பையும், நாம் அடைந்துள்ள மாபெரும் முன்னேற்றத்தையும் இந்த உருமாற்றம் பறைசாற்றுகிறது. இதைப் பற்றி அறிய, மத்திய அமைச்சர் திரு ஜகத் பிரகாஷ் நட்டா அவர்களின் இந்தக் கட்டுரையைப் படியுங்கள்!”
***
(Release ID: 2170011)
SS/SE/SH
(Release ID: 2170375)