தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தகவல் ஒலிபரப்பு அமைச்சக செயலாளர் தலைமையில் கூட்டுப் பணிக்குழு கூட்டம்

प्रविष्टि तिथि: 29 AUG 2025 4:15PM by PIB Chennai

நேரடி நிகழ்ச்சிகளை மேம்படுத்துவது குறித்த கூட்டுப் பணிக்குழுவின் முதல் கூட்டம் ஆகஸ்ட் 26 ஆம் தேதி புதுதில்லியில் உள்ள தேசிய ஊடக மையத்தில் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் செயலாளர் திரு சஞ்சய் ஜாஜு தலைமையில் கூடியது.

பிரதமர் திரு நரேந்திர மோடி தமது சமீபத்திய உரைகளில், இந்தியாவின் நேரடி பொழுதுபோக்குத் துறையின் பயன்படுத்தப்படாத பரந்த திறனைச் சுட்டிக்காட்டிவேலைவாய்ப்பு, முதலீடு, சுற்றுலா மற்றும் இந்தியாவின் கலாச்சார மற்றும் உலகளாவிய செல்வாக்கின் முக்கிய இயக்கியாக அதன் பங்கை வலியுறுத்தினார். ஜூலை 2025-ல் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவின் வழிகாட்டுதலின் கீழ்இதற்கான கூட்டுப்பணிக்குழு அமைக்கப்பட்டது. இந்தியாவின் இசை நிகழ்ச்சி பொருளாதாரத்தை வடிவமைக்க மத்திய மற்றும் மாநில அரசுகள், தொழில் சங்கங்கள், இசை உரிமைகள் சங்கங்கள் மற்றும் முக்கிய நிகழ்வு நிறுவனங்களின் பிரதிநிதிகளை இது ஒன்றிணைக்கிறது.

இந்தக் கூட்டத்தில் தகவல் மற்றும் ஒலிபரப்பு, கலாச்சாரம், இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு, திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர், நிதி, தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை  மற்றும் இந்திய விளையாட்டு ஆணையம் ஆகியவற்றின் முக்கிய பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். கூட்டுப் பணிக்குழுவின்  முதல் கூட்டத்தில் மகாராஷ்டிரா, தில்லி, உத்தரப் பிரதேசம், தெலுங்கானா மற்றும் கர்நாடகா மாநில அரசுகளின் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய தகவல் ஒலிபரப்பு அமைச்சக செயலாளர், இது 15-20 மில்லியன் வேலைகளை உருவாக்கும் என்று கூறினார்.  உள்கட்டமைப்பை விரிவுபடுத்தும் மற்றும் இந்தியாவின் உலகளாவிய கலாச்சார செல்வாக்கை வலுப்படுத்தும் திறன் கொண்ட, 2030-ம் ஆண்டுக்குள் இந்தியாவை முதல் 5 உலகளாவிய நேரடி பொழுதுபோக்கு இடங்களில் ஒன்றாக நிறுவுவதற்கான அரசின் உறுதிப்பாட்டை அவர் விளக்கினார். 

கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள்

· ஒற்றை சாளர தளம்: வணிகம் செய்வதை எளிதாக்குவதற்காக நேரடி நிகழ்வு அனுமதிகளை இந்தியா சினி ஹப் போர்ட்டலில் ஒருங்கிணைத்தல்.

· இசை உரிமம் & அறிவுசார் சொத்து உரிமைகள்: உரிமைகள் சங்கங்களுடன் இணைந்து அக்டோபர் 2025- க்குள் மையப்படுத்தப்பட்ட டிஜிட்டல் இசை உரிமப் பதிவேட்டைத் தொடங்குதல்.

· உள்கட்டமைப்பு மேம்பாடு: நேரடி நிகழ்வுகளுக்கு அரங்கங்கள் மற்றும் பொது இடங்களை பல முறை பயன்படுத்த அனுமதிக்கும் மாதிரி கொள்கையை உருவாக்குதல் மற்றும் மாநிலங்களில் புதிய பசுமை மைதான இட மேம்பாட்டை ஊக்குவித்தல்.

திறன் மேம்பாடு: தேசிய திறன் தகுதி கட்டமைப்பில்  நேரடி பொழுதுபோக்கு திறன்களைச் சேர்த்தல்.

நிதி ஊக்கத்தொகைகள்: நேரடி பொழுதுபோக்கு துறைக்கான ஜிஎஸ்டி வரி தள்ளுபடிகள், கலப்பு நிதி மாதிரிகள், மானியங்கள் மற்றும் எம்எஸ்எம்இ அங்கீகாரம் ஆகியவற்றைக் கருத்தில் கொள்ளுதல்.

பின்னணி

2024-ம் ஆண்டில் ரூ 20,861 கோடி மதிப்புள்ள இந்தியாவின் நேரடி பொழுதுபோக்கு சந்தை ஆண்டுதோறும் 15% வளர்ச்சியை அடைந்து வருகிறது.  ஊடகங்கள் மற்றும் பொழுதுபோக்குத் துறையின் வேகமாக வளர்ந்து வரும் பிரிவுகளில் இதுவும்  ஒன்றாகும். முதல் மற்றும் இரண்டாம் நிலை நகரங்களில் அதிகரித்து வரும் தேவை, இசை சுற்றுலாவின் வேகம்பார்வையாளர் அனுபவங்கள் ஆகியவற்றுடன், இந்தத் துறை இந்தியாவின் படைப்புப் பொருளாதாரத்தின் ஒரு முக்கிய தூணாக வளர்ந்து வருகிறது.

***

(Release ID: 2161855)

AD/PKV/KR/DL


(रिलीज़ आईडी: 2161992) आगंतुक पटल : 27
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Assamese , English , Urdu , Marathi , हिन्दी , Gujarati , Kannada , Malayalam