பிரதமர் அலுவலகம்
குஜராத் மாநிலம் கெவாடியாவில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஒற்றுமையின் சிலையை திரு உமர் அப்துல்லா பார்வையிட்டதற்கு பிரதமர் பாராட்டு தெரிவித்துள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
31 JUL 2025 11:05PM by PIB Chennai
குஜராத் மாநிலம் கெவாடியாவில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஒற்றுமையின் சிலையையும் சபர்மதி ஆற்றின் முகத்துவாரத்தையும் திரு உமர் அப்துல்லா பார்வையிட்டதை பிரதமர் திரு நரேந்திர மோடி வரவேற்று பாராட்டு தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் திரு உமர் அப்துல்லாவின் எக்ஸ் தளப் பதிவிற்கு பதிலளித்து பிரதமர் கூறியிருப்பதாவது:
“காஷ்மீரிலிருந்து கெவாடியாவிற்கு!
சபர்மதி ஆற்றின் முகத்துவாரத்தில் ஓடியும் ஒற்றுமையின் சிலையைப் பார்வையிட்டும் திரு உமர் அப்துல்லா அவர்கள் மகிழ்ச்சி அடைவது காண்பதற்கு நன்றாக உள்ளது. ஒற்றுமையின் சிலைக்கான அவரது பயணம் ஒற்றுமையின் முக்கியமான செய்தியை வழங்குவதோடு இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்குப் பயணம் செய்ய சக நாட்டவரை ஊக்கப்படுத்தும்.
@OmarAbdullah”
***
(Release ID: 2151139)
AD/SMB/KPG/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2152423)
வருகையாளர் எண்ணிக்கை : 9
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam