பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

உத்தராகண்ட் மாநிலம் பித்தோராகரில் சாலை விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்குப் பிரதமர் இரங்கல் - கருணைத் தொகை அறிவிப்பு

Posted On: 15 JUL 2025 10:02PM by PIB Chennai

உத்தராகண்ட் மாநிலம் பித்தோராகரில் சாலை விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குப் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா      2 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு 50,000 ரூபாயும் கருணைத் தொகை வழங்கப்படும் என்று அவர் அறிவித்துள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

“உத்தராகண்ட் மாநிலம் பித்தோராகரில் நிகழ்ந்த சாலை விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகள் வருத்தமளிக்கிறது. விபத்தில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு இரங்கல். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும்.

இறந்த ஒவ்வொருவரின்  குடும்பத்தினர்களுக்கும் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து 2 லட்சம் ரூபாய் கருணைத் தொகை வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு தலா 50,000 ரூபாய் வழங்கப்படும்: பிரதமர் நரேந்திர மோடி”

***

(Release ID: 2145062)

VL/TS/PLM/AG


(Release ID: 2145145) Visitor Counter : 4