பிரதமர் அலுவலகம்
உத்தராகண்ட் மாநிலம் பித்தோராகரில் சாலை விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்குப் பிரதமர் இரங்கல் - கருணைத் தொகை அறிவிப்பு
Posted On:
15 JUL 2025 10:02PM by PIB Chennai
உத்தராகண்ட் மாநிலம் பித்தோராகரில் சாலை விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குப் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா 2 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு 50,000 ரூபாயும் கருணைத் தொகை வழங்கப்படும் என்று அவர் அறிவித்துள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
“உத்தராகண்ட் மாநிலம் பித்தோராகரில் நிகழ்ந்த சாலை விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகள் வருத்தமளிக்கிறது. விபத்தில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு இரங்கல். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும்.
இறந்த ஒவ்வொருவரின் குடும்பத்தினர்களுக்கும் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து 2 லட்சம் ரூபாய் கருணைத் தொகை வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு தலா 50,000 ரூபாய் வழங்கப்படும்: பிரதமர் நரேந்திர மோடி”
***
(Release ID: 2145062)
VL/TS/PLM/AG
(Release ID: 2145145)
Visitor Counter : 4
Read this release in:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam