பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

குஜராத்தின் வதோதரா மாவட்டத்தில் பாலம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் இரங்கல்

பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து நிவாரணத் தொகை அறிவிப்பு

Posted On: 09 JUL 2025 12:49PM by PIB Chennai

குஜராத்தின் வதோதரா மாவட்டத்தில் பாலம் இடிந்து விழுந்த சம்பவத்தில்  உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் திரு மோடி விருப்பம் தெரிவித்துள்ளார்.

பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000-ம் நிவாரண நிதியாக வழங்கப்படும் என்றும் பிரதமர் அறிவித்துள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டுள்ளதாவது;

"குஜராத்தின் வதோதரா மாவட்டத்தில் பாலம் இடிந்து விழுந்த சம்பவத்தில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது மிகவும் வருத்தமளிக்கிறது. தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு இரங்கல். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ. 50,000-ம் வழங்கப்படும்: பிரதமர் நரேந்திர மோடி

***

(Release ID: 2143347)

VJ/TS/IR/AG/KR


(Release ID: 2143419)