இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ராஜஸ்தானில் கேலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகள் நவம்பர் மாதம் நடைபெறும்: விளையாட்டுத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா அறிவிப்பு

Posted On: 25 JUN 2025 6:26PM by PIB Chennai

பூர்ணிமா பல்கலைக்கழகமும் ராஜஸ்தான் பல்கலைக்கழகமும் இணைந்து நவம்பர் மாதம் ஜெய்ப்பூரில் கேலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் தொடங்கப்பட்ட கேலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகளின் ஐந்தாவது  ஆண்டாக இது நடைபெறவுள்ளது.

இதில் 200-க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களில் இருந்து 4,000-க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் பங்கேற்கின்றனர்.  பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் முந்தைய பதிப்புகளைப் போலவே, இந்த ஆண்டும் 20 பிரிவுகளில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அசாம், அருணாச்சலப் பிரதேசம், மேகாலயா, மிசோரம், சிக்கிம், நாகாலாந்து மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்கள் இணைந்து கடந்த ஆண்டு  நடத்திய கேலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகளில் சண்டிகர் பல்கலைக்கழக அணி சாம்பியன் பட்டம் வென்றது.

"கேலோ இந்தியா இளையோர்  விளையாட்டுப் போட்டிகள் நவம்பர் மாதம் ராஜஸ்தானில் நடைபெறும் என்று அறிவிப்பதில்  மகிழ்ச்சியடைவதாக மத்திய அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா கூறினார். இந்த விளையாட்டுப் போட்டிகளில் 25 வயதுக்குட்பட்ட வீரர்கள் பங்கேற்பர். இந்த ஆண்டு மே மாதம் பீகாரில் நடைபெற்ற 18 வயதுக்குட்பட்ட கேலோ இந்தியா இளையோர் விளையாட்டுப் போட்டிகளுக்குப் பிறகு நடத்தப்படும் இந்தப் பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டியில் நாட்டின் தலைசிறந்த விளையாட்டு வீர்ர்களின் திறமைகளைக் கண்டறியும் வகையில் நடத்தப்படும்  இப்போட்டிகள் விளாயாட்டு வீர்ர்களுக்கு சிறந்த வாய்ப்பை வழங்குகின்றன என்று திரு மன்சுக் மாண்டவியா தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்  https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2139650

***

AD/TS/SV/KPG/DL


(Release ID: 2139668) Visitor Counter : 4