பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சீனாவின் கிங்டாவோவில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்தில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்பு

Posted On: 24 JUN 2025 11:03AM by PIB Chennai

சீனாவின் கிங்டாவோவில் ஜூன் 25 முதல் 26 வரை நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்தில் இந்திய உயர்நிலைக் குழுவிற்கு பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் தலைமை தாங்குகிறார். இக்கூட்டத்தில், பிராந்திய, சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பு, பயங்கரவாத எதிர்ப்பு முயற்சிகள், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உறுப்பு நாடுகளின் பாதுகாப்பு அமைச்சகங்களுக்கிடையேயான ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து பாதுகாப்பு அமைச்சர்கள் விவாதிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கொள்கைகள் மற்றும் ஆணைகளுக்கான இந்தியாவின் தொடர்ச்சியான உறுதிப்பாட்டை பாதுகாப்பு அமைச்சர் எடுத்துரைப்பார். சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பை அதிகரிப்பதற்கான இந்தியாவின் தொலைநோக்குப் பார்வையை அவர் சுட்டிக்காட்டுவார். பிராந்தியத்தில் பயங்கரவாதத்தை ஒழிக்க கூட்டு மற்றும் நீடித்த முயற்சிகளுக்கு அழைப்பு விடுப்பார். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பிற்குள் சிறந்த வர்த்தகம், பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் இணைப்புக்கான அவசியத்தையும் அமைச்சர் வலியுறுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இக்கூட்டத்திற்கிடையே சீனா, ரஷ்யா உள்ளிட்ட சில நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்களுடன் அவர் இருதரப்பு பேச்சுகளை நடத்த உள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2139116

***

AD/TS/IR/RR/KR


(Release ID: 2139230)