உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் வரலாற்றுச் சிறப்புமிக்க 11 ஆண்டுகள், பொது சேவைக்கான அர்ப்பணிப்பு, தீர்க்கமான முடிவுகள் ஆகியவற்றின் பொற்காலம் - மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா

Posted On: 09 JUN 2025 4:53PM by PIB Chennai

மத்திய உள்துறை அமைச்சரும், கூட்டுறவு அமைச்சருமான திரு அமித் ஷா, பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான  மத்திய அரசின் வரலாற்றுச் சிறப்புமிக்க 11 ஆண்டுகள் பொது சேவைக்கான உறுதியான முடிவுகள், அர்ப்பணிப்பு ஆகியவற்றின் பொற்காலம் என்று தெரிவித்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், இந்த 11 ஆண்டுக்கால சேவையில், நாடு பொருளாதார மறுமலர்ச்சி, சமூக நீதி, கலாச்சார பெருமை மற்றும் தேசிய பாதுகாப்பின் புதிய சகாப்தத்தைக் கண்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். தலைமைத்துவப் பண்பில் தெளிவாகவும், உறுதியாகவும், பொது சேவையில் கவனம் செலுத்தும் நோக்கிலும் இருக்கும்போது, சேவை, பாதுகாப்பு மற்றும் நல்லாட்சி ஆகியவற்றில் புதிய உச்சங்களை எட்ட முடியும் என்பதை மத்திய அரசு நிரூபித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

2014-ம் ஆண்டு பிரதமராக திரு நரேந்திர மோடி பொறுப்பேற்றுக் கொண்ட போது,  நாட்டில் தெளிவான கொள்கை   இல்லாத நிலையும், ஊழல் மலிந்தும் இருந்தது என்றும்  அவர் கூறினார். நாட்டின் பொருளாதாரம் பலவீனமாக இருந்ததுடன், நிர்வாக அமைப்பின் செயல்பாடுகள் மந்தமான நிலையில் இருந்ததாக அவர் கூறினார்.  இந்த 11 ஆண்டுகால பொதுச் சேவையில், ‘குறைந்தபட்ச அரசு, அதிகபட்ச நிர்வாகம்’ என்ற அணுகுமுறை நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உத்வேகம் அளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். விவசாயிகள், பெண்கள், பிற்படுத்தப்பட்டோர், ஒடுக்கப்பட்ட மக்கள் மற்றும் தாழ்த்தப்பட்டோருக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.  அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம், அனைவரது நம்பிக்கை, அனைவரின் முயற்சி என்ற தாரக மந்திரத்தின் அடிப்படையில் அரசு செயல்பட்டு வருவதாக உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2135136

***

AD/TS/SV/AG/DL


(Release ID: 2135207)