பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

2025 ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணியின் சிறப்பான செயல்பாட்டிற்காக பிரதமர் வாழ்த்து தெரிவித்தார்

प्रविष्टि तिथि: 02 JUN 2025 3:01PM by PIB Chennai

தென் கொரியாவில் சமீபத்தில் நடைபெற்ற 2025 ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணியை சிறப்பான செயல்பாட்டிற்காக பிரதமர் திரு. நரேந்திர மோடி பாராட்டியுள்ளார். "ஒவ்வொரு விளையாட்டு வீரரின் கடின உழைப்பும் உறுதியும் போட்டி முழுவதும் தெளிவாகக் காணப்பட்டது" என்று திரு. மோடி கூறியுள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:

"தென் கொரியாவில் அண்மையில் நடைபெற்ற 2025 ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் நமது அணியின் சிறப்பான செயல்பாட்டிற்காக இந்தியா பெருமை கொள்கிறது. ஒவ்வொரு விளையாட்டு வீரரின் கடின உழைப்பும் உறுதியும் போட்டி முழுவதும் தெளிவாகக் காணப்பட்டன. விளையாட்டு வீரர்களின் எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துகள்."

 

***

(Release ID: 2133260)
AD/TS/IR/RR/KR


(रिलीज़ आईडी: 2133268) आगंतुक पटल : 35
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Telugu , Kannada , Malayalam , Bengali , Assamese , Odia , English , Urdu , Marathi , हिन्दी , Bengali-TR , Manipuri , Punjabi , Gujarati