குடியரசுத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

இலக்கியம் எவ்வளவு மாறிவிட்டது? என்ற தலைப்பில் குடியரசுத் தலைவர் மாளிகை இலக்கிய மாநாட்டை நடத்துகிறது

Posted On: 28 MAY 2025 1:20PM by PIB Chennai

குடியரசுத் தலைவர் மாளிகை கலாச்சார மையத்தில் மே 29 மற்றும் 30, 2025 ஆகிய தேதிகளில் கலாச்சார அமைச்சகத்தின் சாகித்ய அகாடமியுடன் இணைந்து இலக்கியம் எவ்வளவு மாறிவிட்டது? என்ற தலைப்பில் இலக்கிய மாநாடு நடத்தப்பட உள்ளது.

குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு, மே 29, 2025 அன்று கலாச்சாரம் மற்றும் சுற்றுலா அமைச்சர் ஸ்ரீ கஜேந்திர சிங் ஷெகாவத் மற்றும் நாடு முழுவதும் உள்ள இலக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் மாநாட்டைத் தொடங்கி வைப்பார்.

இரண்டு நாள் மாநாட்டில் இதயத்திலிருந்து நேராக எனும் கவிஞர்கள் சந்திப்பு, இந்தியாவின் பெண்ணிய இலக்கியம்: புதிய தளங்களை அடையாளம் காணுதல்; இலக்கியத்தில் மாற்றம் மற்றும். மாற்றத்திற்கான இலக்கியம்; உலகளாவிய பார்வையில் இந்திய இலக்கியத்தின் புதிய திசைகள் போன்ற பல்வேறு தலைப்புகளில் பல்வேறு அமர்வுகள் நடைபெறும். இந்த மாநாடு தேவி அஹில்யாபாய் ஹோல்கரின் சரித்திரத்துடன் நிறைவடையும்.

***

(Release ID: 2131948)

AD/SM/RR


(Release ID: 2131973)