ஆயுஷ்
azadi ka amrit mahotsav

ஆயுர்வேத தினம் ஆண்டுதோறும் செப்டம்பர் 23 ஆம் தேதி கொண்டாடப்படும்

Posted On: 13 MAY 2025 6:11PM by PIB Chennai

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 23-ம் தேதி ஆயுர்வேத தினமாகக் கொண்டாடப்படும் என மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 2025 மார்ச் 23-ந் தேதியிட்ட அரசிதழ் அறிவிப்பு மூலம் அறிவிக்கப்பட்ட இந்த மாற்றம், ஆயுர்வேத தினத்தைக் கடைப்பிடிக்கும் முந்தைய நடைமுறையிலிருந்து முக்கியமான மாற்றத்தைக் குறிக்கிறது.

சுகாதாரம் மற்றும் நல்வாழ்வில் முக்கிய பங்கு வகிக்கும் அறிவியல் மற்றும் சான்றுகள் அடிப்படையிலான, முழுமையான மருத்துவ முறையான ஆயுர்வேதத்தை ஊக்குவிப்பதற்காக ஆயுர்வேத தினம் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. இதுவரை, ஆயுர்வேத தினம் கார்த்திகை மாதத்தில் (பொதுவாக அக்டோபர் அல்லது நவம்பர்) கொண்டாடப்படும். இருப்பினும், ஒவ்வொரு ஆண்டும்  கொண்டாடும் தேதி மாறி வருவதால், ஆயுர்வேத தினத்தைக் கடைப்பிடிப்பதில் ஒரு நிலையான வருடாந்திர தேதி இல்லை.

இந்த முரண்பாட்டை நிவர்த்தி செய்யவும், தேசிய மற்றும் உலகளாவிய கொண்டாட்டங்களுக்கான நிலையான, பொருத்தமான மாற்றுகளை ஆராய ஆயுஷ் அமைச்சகம் ஒரு குழுவை அமைத்தது. இந்த நிபுணர் குழு நான்கு சாத்தியமான தேதிகளை முன்மொழிந்தது. செப்டம்பர் 23-ம் தேதி விருப்பமான தேர்வாக வெளிப்பட்டது. இந்த முடிவு நடைமுறை மற்றும் குறியீட்டு பரிசீலனைகளின் மூலம் வழிநடத்தப்பட்டது.

 

சுகாதார வல்லுநர்கள், கல்வி அமைப்புகள் மற்றும் சர்வதேச கூட்டாளிகள் புதிதாக தேர்வு செய்யப்பட்ட தேதியை ஏற்றுக்கொண்டு ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 23 அன்று ஆயுர்வேத தின கொண்டாட்டங்களில் தீவிரமாக ஈடுபட ஆயுஷ் அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது. இந்த மாற்றத்தை, உலகளாவிய சுகாதார அமைப்பில் ஆயுர்வேதத்தை இணைத்து, நிலையான சுகாதார அமைப்பாக காலத்தால் அழியாத மதிப்பை மேம்படுத்துவதற்கான வாய்ப்பாக அமைச்சகம் கருதுகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணலாம்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2128442

***

SV/GK/RJ/DL


(Release ID: 2128467)