பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

மத்தியப் பிரதேச மாநிலம் மண்ட்சௌரில் நேரிட்ட விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் இரங்கல்

பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து நிதியுதவி வழங்கப்படும் என்று பிரதமர் அறிவிப்பு

Posted On: 27 APR 2025 9:49PM by PIB Chennai

மத்தியப் பிரதேச மாநிலம் மண்ட்சௌரில் நேரிட்ட விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தேசிய நிவாரண நிதியில் இருந்து தலா ரூ. 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50 ஆயிரமும் நிதியுதவி வழங்கப்படும் என்று பிரதமர் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து சமூக வலைத்தளமான எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

"மத்தியப் பிரதேச மாநிலம் மண்ட்சௌரில்  விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்பு மிகுந்த வருத்தம் அளிக்கிறது. இந்த விபத்தில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பத்தினருக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் பூரண குணமடைய வேண்டுகிறேன்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ. 50,௦௦௦ - மும் நிவாரண உதவி வழங்கப்படும்: பிஎம் @ நரேந்திரமோடி

---

(Release ID: 2124756)

TS/SV/KPG/KR


(Release ID: 2124868) Visitor Counter : 8