பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

நவராத்திரியை முன்னிட்டு அனைவருக்கும் பிரதமர் வாழ்த்து

Posted On: 30 MAR 2025 11:37AM by PIB Chennai

 

நவராத்திரியை முன்னிட்டு நாட்டு மக்களுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அன்னை தெய்வ வழிபாட்டிற்காக அர்ப்பணிக்கப்பட்ட பண்டிட் ஜஸ்ராஜின் பாடல் ஒன்றையும் அவர் பகிர்ந்து கொண்டார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

"நாட்டுமக்களுக்கு இனிய நவராத்திரி நல்வாழ்த்துகள். சக்தி சாதனா என்ற இந்த புனித பண்டிகை ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் தைரியம், கட்டுப்பாடு, வலிமையை நிரப்பட்டும். ஜெய் மாதா தேவி!"

"நவராத்திரியின் தொடக்கம் வழிபாட்டாளர்களிடையே பக்தியின் புதிய பரவசத்தை எழுப்புகிறது. அன்னை தெய்வத்தின் வழிபாட்டிற்காக அர்ப்பணிக்கப்பட்ட பண்டிட் ஜஸ்ராஜ் அவர்களின் இந்தப் பாடல் அனைவரையும் மெய்மறக்கச் செய்யப் போகிறது."

***

PLM/KV

 

 


(Release ID: 2116796) Visitor Counter : 27