இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

2-வது கேலோ இந்தியா மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுகளை டாக்டர் மன்சுக் மாண்டவியா தொடங்கிவைத்தார்

Posted On: 20 MAR 2025 6:50PM by PIB Chennai

புதுதில்லியில் உள்ள இந்திரா காந்தி விளையாட்டு அரங்க வளாகத்தில் கே டி ஜாதவ் உள்விளையாட்டு கூடத்தில் 2-வது கேலோ இந்தியா மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுகளை மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுகள்  அமைச்சர்  டாக்டர் மன்சுக் மாண்டவியா  இன்று தொடங்கிவைத்தார். 8 நாட்கள் நடைபெறும் 6 வகையான போட்டிகளில் 1300-க்கும் அதிகமான மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களும், வீராங்கனைகளும் பங்கேற்கிறார்கள்.

தொடக்க நிகழ்வில் பாராலிம்பிக் போட்டிகளில் வெற்றி பெற்ற சிம்ரன் சர்மா, பிரவின் குமார், நிதிஷ்குமார், நித்யஸ்ரீ, ப்ரீதி பால், மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல்  அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார், இந்திய பாராலிம்பிக் குழுவின் தலைவர் திரு தேவேந்திர  ஜஜ்ஹாரியா உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா, 2024 பாரிஸ் பாராலிம்பிக்ஸ் போட்டிகளில் 29 பதக்கங்களை  வென்றிருப்பது நமது விளையாட்டு வீரர்களின்  ஆற்றலை நிருபிக்கிறது என்றும் இது உலக அளவில் நாட்டிற்கு பெருமிதத்தை தருகிறது என்றும் கூறினார்.

மத்திய அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் பேசுகையில், மாற்றுத்திறனாளி விளையாட்டு வீராங்கனைகளுக்கான  கேலோ இந்தியா போட்டிகள் 2025, உலக அளவிலான ஒரு மேடையாகும் என்றும் இது தங்களின் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான ஒரு களமாகும் என்றும் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2113356

***

TS/SMB/AG/DL


(Release ID: 2113421)