பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

அமெரிக்காவின் நியூயார்க்கில் நடைபெறும் 2025-ம் ஆண்டிற்கான சமூக மேம்பாட்டு ஆணையத்தின் 63வது அமர்வில் மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு இணையமைச்சர் திருமதி சாவித்ரி தாக்கூர் தலைமையில் இந்தியக் குழு பங்கேற்கிறது

Posted On: 10 FEB 2025 2:34PM by PIB Chennai

மத்திய அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு இணையமைச்சர் திருமதி சாவித்ரி தாக்கூர் தலைமையில், 2025 பிப்ரவரி 10 முதல் 14 வரை நடைபெறும் சமூக மேம்பாட்டு ஆணையத்தின் 63-வது அமர்வில் இந்தியா பங்கேற்கவுள்ளது. சமூகக் கொள்கைகளை முன்னெடுப்பதிலும், உலகளாவிய சமூக நல்வாழ்வை மேம்படுத்துவதிலும் இந்த அமர்வு கவனம் செலுத்தும் .முக்கியமான சமூக மேம்பாட்டுப் பிரச்சனைகள் குறித்த விவாதங்கள் மற்றும் கூட்டாண்மைகளை வளர்ப்பதே இந்த அமர்வின் நோக்கமாகும்.

இந்த அமர்வின் போது, இந்தியா முக்கிய விவாதங்களில் ஆர்வமுடன் பங்கேற்கும். "சமூக ஒற்றுமை மற்றும் சமூக ஒற்றுமையை வலுப்படுத்துதல்" என்ற கருப்பொருளில், இந்தியாவின் அறிக்கையை 2025 பிப்ரவரி 11 அன்று நடைபெறும் அமைச்சர்கள் நிலையிலான மன்றத்தில் இணையமைச்சர் திருமதி சாவித்ரி தாக்கூர் சமர்பிப்பார்.

"அடிக்கடி நிகழும் மற்றும் சிக்கலான நெருக்கடிகளின் சூழலில் சமூக மீள்தன்மையை வலுப்படுத்துவதற்கான கொள்கைகள்" போன்ற வளர்ந்து வரும் பிரச்சனைகள் குறித்த விவாதங்களில் இந்தியா பங்கேற்கும். அத்துடன், உலகளாவிய உரிமைகள் அடிப்படையிலான சமூகப் பாதுகாப்பு அமைப்புகள் குறித்த விவாதங்களிலும் பங்கேற்கும்.

இந்தியக் குழு, சமூக மீள்தன்மையை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட கொள்கைகள் மற்றும் முன்முயற்சிகளை இந்தக் கூட்டத்தில் முன்னிலைப்படுத்தும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2101276

***

TS/IR/RJ/RR


(Release ID: 2101299) Visitor Counter : 37