பிரதமர் அலுவலகம்
பிரதமர் தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல்வர்கள், துணை முதல்வர்கள் கூட்டம்
Posted On:
17 OCT 2024 9:59PM by PIB Chennai
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதலமைச்சர்கள் மற்றும் துணை முதலமைச்சர்களின் கூட்டம், பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்றது. தேச முன்னேற்றத்தை முன்னெடுத்துச் செல்வதற்கும், ஏழைகள் மற்றும் அடித்தட்டு மக்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கும் உறுதிபூண்டிருப்பதை பிரதமர் மீண்டும் உறுதிப்படுத்தினார்.
இது தொடர்பாக சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டதாவது:
“தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல்வர்கள் மற்றும் துணை முதல்வர்கள் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினேன். நல்லாட்சியின் அம்சங்கள் மற்றும் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான வழிகள் குறித்து நாங்கள் விரிவாக விவாதித்தோம். தேச முன்னேற்றத்தை மேம்படுத்துவதற்கும், ஏழைகள் மற்றும் அடித்தட்டு மக்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கும் எங்கள் கூட்டணி உறுதிபூண்டுள்ளது.”
***
(Release ID: 2065952)
BR/KR
(Release ID: 2065971)
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam