பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav g20-india-2023

தூய்மை இந்தியா திட்டம் 10 ஆண்டுகளை நிறைவு செய்திருப்பதற்கு பிரதமர் பாராட்டு

Posted On: 02 OCT 2024 9:19AM by PIB Chennai

இந்தியாவை தூய்மை நாடாக மாற்றுவதற்கும், மேம்பட்ட சுகாதார வசதிகளை உறுதி செய்வதற்குமான முக்கியத்துவம் வாய்ந்த கூட்டு முயற்சியான தூய்மை இந்தியா இயக்கம் தொடங்கப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவடைந்ததற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

இது பற்றி சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டதாவது:

"இன்று, தூய்மை இந்தியா திட்டத்தின் 10-வது ஆண்டை நாம் கொண்டாடுகிறோம். இது, இந்தியாவைத் தூய்மையாக்குவதற்கும், மேம்பட்ட சுகாதார வசதிகளை உறுதி செய்வதற்குமான  ஒரு முக்கியமான கூட்டு முயற்சியாகும். இந்த இயக்கத்தை வெற்றிபெறச் செய்த அனைவரையும்  நான் வணங்குகிறேன்!"

---

RB/DL



(Release ID: 2061047) Visitor Counter : 31