பிரதமர் அலுவலகம்
'நீர் சேமிப்பு மக்கள் பங்கேற்பு 'திட்டத்தை செப்டம்பர் 6 அன்று தொடங்கி வைக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் உரையாற்றுகிறார்
குஜராத் முழுவதும் சுமார் 24,800 மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை நிர்மாணிப்பதை இந்த முயற்சி நோக்கமாகக் கொண்டுள்ளது
நீர் சேமிப்பை நாட்டின் முன்னுரிமையாக மாற்றுவதற்கான, பிரதமரின் உறுதிப்பாட்டை நிறைவேற்றுவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது
Posted On:
05 SEP 2024 2:17PM by PIB Chennai
குஜராத் மாநிலம் சூரத்தில் 2024, செப்டம்பர் 6 அன்று மதியம் 12:30 மணிக்கு காணொலி காட்சி மூலம் ‘நீர் சேகரிப்பு மக்கள் பங்கேற்பு முன்முயற்சி' தொடக்க விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றவுள்ளார்.
நீர் பாதுகாப்பு குறித்த பிரதமரின் தொலைநோக்குப் பார்வையை முன்னோக்கி, இந்த முயற்சி சமூக கூட்டாண்மை மற்றும் உரிமையை வலியுறுத்துவதன் மூலம் தண்ணீரைப் பாதுகாக்க முயல்கிறது மற்றும் இது முழு சமூகம் மற்றும் அரசின் முழு அணுகுமுறையால் இயக்கப்படுகிறது. குஜராத் அரசு தலைமையிலான நீர் சேகரிப்பு முயற்சியின் வெற்றியை அடிப்படையாகக் கொண்டு, நீர்வள அமைச்சகம், மாநில அரசுடன் இணைந்து, குஜராத்தில் "நீர் சேகரிப்பு மக்கள் பங்கேற்பு" முயற்சியைத் தொடங்குகிறது.
இத்திட்டத்தின் கீழ் மாநிலம் முழுவதும் சுமார் 24,800 மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் சமுதாய பங்களிப்புடன் கட்டப்பட்டு வருகின்றன. இந்த நீர் செறிவூட்டும் கட்டமைப்புகள் மழைநீர் சேகரிப்பை மேம்படுத்தவும், நீண்டகால நீர் நிலைத்தன்மையை உறுதி செய்யவும் கருவியாக இருக்கும்.
***
IR/RS/KV
(Release ID: 2052208)
Visitor Counter : 95
Read this release in:
Telugu
,
Kannada
,
Bengali
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Malayalam