பிரதமர் அலுவலகம்

நேபாளத்தின் தனாஹூன் நகரில் நிகழ்ந்த பேருந்து விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி கருணைத் தொகை அறிவித்தார்

Posted On: 24 AUG 2024 2:51PM by PIB Chennai

நேபாளத்தின் தனாஹுன் மாவட்டத்தில் நிகழ்ந்த பேருந்து விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி கருணைத் தொகையை அறிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள சமூக ஊடக எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:

"நேபாளத்தின் தனாஹுன் மாவட்டத்தில் நடந்த இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும்."

*****

PLM / KV

 

 

 



(Release ID: 2048492) Visitor Counter : 30