பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

நித்தி ஆயோக்கின் 9-வது நிர்வாகக் குழுக் கூட்டத்தில் பிரதமர் பங்கேற்பு

प्रविष्टि तिथि: 27 JUL 2024 10:06PM by PIB Chennai

புதுதில்லியில் நடைபெற்ற நித்தி ஆயோக்கின் 9-வது நிர்வாகக் குழுக்  கூட்டத்தில் பிரதமர் திரு. நரேந்திர மோடி கலந்து கொண்டு உரையாற்றினார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் கூறியிருப்பதாவது:"நித்தி ஆயோக்கின் 9-வது நிர்வாகக் குழுக் கூட்டத்தில் உரையாற்றினேன். வளர்ந்த பாரதத்தை உருவாக்க மத்திய, மாநில அரசுகளின் கூட்டு முயற்சிகளின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தேன். முதலீடுகளை அதிகரிப்பது, ஏற்றுமதியை அதிகரிப்பது, இளைஞர்களுக்கு அதிக திறன் மேம்பாட்டு வாய்ப்புகளை உறுதி செய்வது, ஜல் சக்தி இயக்கத்தை மேம்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து வலியுறுத்தப்பட்டது.
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2037976

“நித்தி ஆயோக்கின் 9-வது நிர்வாகக் குழுக்  கூட்டத்தில் கலந்து கொண்டேன். முதல்வர்களின் ஆழ்ந்த கருத்துக்களை கேட்டறிந்தேன்.”

*****

RB/DL


(रिलीज़ आईडी: 2038066) आगंतुक पटल : 78
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Hindi_MP , Bengali , Manipuri , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam