பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

குடியரசுத்தலைவர் மாளிகையில் நடைபெற்ற பாதுகாப்புப் படையினரின் வீர தீரச் செயல்களுக்கான விருது-2024 (முதல் கட்டம்) நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்பு

प्रविष्टि तिथि: 05 JUL 2024 10:01PM by PIB Chennai

குடியரசுத்தலைவர் மாளிகையில் நடைபெற்ற பாதுகாப்புப் படையினரின் வீர தீரச் செயல்களுக்கான விருது-2024 (முதல் கட்டம்) நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்றார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

"குடியரசுத்தலைவர் மாளிகையில் நடைபெற்ற பாதுகாப்புப் படையினரின் வீர தீரச் செயல்களுக்கான விருது-2024 (முதல் கட்டம்) நிகழ்ச்சியில்  குடியரசுத்தலைவர் அவர்கள்  வீரதீரச் செயல்களுக்கான விருதுகளை வழங்கினார். நமது துணிச்சலான வீரர்களின் வல்லமை மற்றும் அர்ப்பணிப்பு குறித்து நாடு பெருமிதம் கொள்கிறது. சேவை மற்றும் தியாகத்தின் மிக உயர்ந்த லட்சியங்களுக்கு அவர்கள் எடுத்துக்காட்டுகளாகத் திகழ்கின்றனர். அவர்களின் தைரியம் எப்போதும் மக்களுக்கு ஊக்கமளிக்கும்.”


*************** 
 

PLM/BR/KV


(रिलीज़ आईडी: 2031243) आगंतुक पटल : 89
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Hindi_MP , Marathi , Manipuri , Bengali , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam