தேர்தல் ஆணையம்

2024 பொதுத் தேர்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களின் பதிவுகளை சரிபார்க்கக்கோரி 11 மனுக்கள் வரப்பெற்றுள்ளது

Posted On: 20 JUN 2024 2:28PM by PIB Chennai

தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின், தேர்தல் ஆணையம் 2024, ஜூன் 1 அன்று வெளியிட்ட அறிவிப்பைத் தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களின் பதிவுகளை சர்பார்க்கக் கோரி, 2024 மக்களவைத் தேர்தல் தொடர்பாக 8 மனுக்களும், மாநில சட்டப்பேரவைத் தேர்தல்கள் தொடர்பாக 3 மனுக்களும் தேர்தல் ஆணையத்திற்கு வரபெற்றுள்ளது.

தமிழ்நாட்டில் இருந்து வரப்பெற்ற விண்ணப்பங்களின் விவரம் வருமாறு:

வ.

எண்

மாநிலத்தின் பெயர்

2-இடம் அல்லது 3-ம் இடம் பெற்ற வேட்பாளரிடமிருந்து வரப்பெற்ற வேண்டுகோள்(கட்சி சார்புடையவராக இருந்தால் அதன் விவரம்) 

மக்களவை தொகுதியின் பெயர்

சட்டப் பேரவை தொகுதியின் பெயர்

சரிபார்க்கப் பட வேண்டிய  வாக்குச் சாவடிகளின் எண்ணிக்கை

1

தமிழ்நாடு

பிஜேபி

வேலூர்

வேலூர்

அணைக்கட்டு

கே வி குப்பம்

குடியாத்தம்

வாணியம்பாடி

ஆம்பூர்

1

1

1

1

1

1

 

 

தேமுதிக

விருதுநகர்

விருதுநகர்

14

 

 

 

மொத்தம்

 

20

 

சரிபார்க்கப்படவேண்டிய  இயந்திரங்கள் மற்றும் தேவையான ஆவணங்கள் குறித்த விரிவான, நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை  இந்திய தேர்தல் ஆணையம் 2024, ஜூன் 1 அன்று வெளியிட்டு இருந்தது.

இதன்படி சம்பந்தப்பட்ட மாநில தலைமைத்தேர்தல் அதிகாரி, தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டதிலிருந்து 30 நாட்களுக்குள் உற்பத்தியாளர்களுக்கு தகவல் தெரிவித்து, விண்ணப்பதாரர்களின் ஒருங்கிணைந்த பட்டியலை தேர்தல் ஆணையத்திற்கு தெரிவிக்க வேண்டும்.

அ-து. 2024, ஜூலை 4-ம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும். நிர்ணயிக்கப்பட்டதற்கு 15 நாட்களுக்கு முன்பாக உற்பத்தியாளர்களுக்கும் தலைமைத் தேர்தல் அதிகாரிகள் தகவல் தெரிவித்திருக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2026967

 

***

AD/MM/RS/RR/DL



(Release ID: 2027136) Visitor Counter : 37