பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பிரதமர் திரு மோடிக்கு இலங்கை அதிபர் வாழ்த்து

प्रविष्टि तिथि: 05 JUN 2024 10:19PM by PIB Chennai

இலங்கை அதிபர் திரு ரணில் விக்ரமசிங்கே, பிரதமர் திரு நரேந்திர மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வரலாற்றுச் சிறப்புமிக்க தேர்தல் வெற்றிக்காக வாழ்த்து தெரிவித்தார்.

அதிபர் திரு விக்ரமசிங்கேவின் வாழ்த்துகளுக்கு பிரதமர் நன்றி தெரிவித்தார். இந்தியாவின் அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை என்ற கொள்கை மற்றும் சாகர் தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப இந்தியாவிற்கும், இலங்கைக்கும் இடையே வலுவான உறவுகளை உருவாக்க இந்தியா தொடர்ந்து உறுதிபூண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

2023 ஆம் ஆண்டு ஜூலை மாதம் அதிபர் திரு ரணில் விக்ரமசிங்கே புதுதில்லிக்கு மேற்கொண்ட பயணத்தின் போது வெளியிடப்பட்ட தொலைநோக்கு ஆவணத்தை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள குறிப்பிடத்தக்க முன்னேற்றம் குறித்து இரு தலைவர்களும் மகிழ்ச்சி தெரிவித்தனர். குறிப்பாக, பரஸ்பர வளர்ச்சி, மேம்பாடு மற்றும் வளத்தை ஊக்குவிப்பதற்காக அனைத்து பரிமாணங்களிலும் இணைப்பை மேம்படுத்துவதற்கான முன்னேற்றத்தை விரைவுபடுத்துவது என்ற தங்களது உறுதிப்பாட்டை இருவரும்  மீண்டும் வலியுறுத்தினர்.

***

(Release ID: 2022976)

PKV/BR/RR


(रिलीज़ आईडी: 2023011) आगंतुक पटल : 135
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Bengali , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam