பாதுகாப்பு அமைச்சகம்

காம்பத் வளைகுடாவில் மீன்பிடி படகில் இருந்த படுகாயமடைந்த ஊழியரை இந்திய கடலோர காவல்படை மீட்டது

Posted On: 04 APR 2024 12:25PM by PIB Chennai

காம்பத் வளைகுடா கடற்கரையிலிருந்து 50 கி.மீ தொலைவில் இந்திய மீன்பிடி படகில் படுகாயத்துடன் இருந்த 37 வயதுடைய புஷ்கர்ராஜ் என்பவரை 2024 ஏப்ரல் 3 அன்று பிப்பாவில் உள்ள இந்தியக் கடலோரக் காவல்படைப் பிரிவு சி-409 படகு மூலம் மீட்டது.

அந்த மீனவருக்கு இடது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு, கணுக்கால் உடைந்ததையடுத்து, இந்திய கடலோர காவல்படையின் மருத்துவக் குழுக்களால் ஆரம்ப சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அந்த மீனவர் மாற்றப்பட்டார்.

***

SM/IR/AG/KV



(Release ID: 2017138) Visitor Counter : 68