குடியரசுத் தலைவர் செயலகம்

பாரத ரத்னா விருதுகளை குடியரசுத் தலைவர் வழங்கினார்

Posted On: 30 MAR 2024 1:14PM by PIB Chennai

குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று (மார்ச் 30, 2024) நடைபெற்ற விழாவில், குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு, பாரத ரத்னா விருதுகளை வழங்கினார்.

கீழ்க்கண்டவர்களுக்கு அறிவிக்கப்பட்ட பாரத ரத்னா விருதுகளைக் குடியரசுத் தலைவர் வழங்கினார்:

*பி.வி.நரசிம்மராவ் (மரணத்திற்குப் பிந்தைய விருது). மறைந்த பி.வி.நரசிம்மராவ் சார்பாக, பாரத ரத்னாவை அவரது மகன் திரு பி.வி.பிரபாகர் ராவ் பெற்றுக்கொண்டார்.

*முன்னாள் பிரதமர் சௌத்ரி சரண் சிங் (மறைவுக்குப் பிந்தைய விருது). மறைந்த சௌத்ரி சரண் சிங் சார்பில் அவரது பேரன் திரு ஜெயந்த் சௌத்ரி பாரத ரத்னா விருதைப் பெற்றுக்கொண்டார்.

*டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் (மறைவுக்குப் பிந்தைய விருது). மறைந்த டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் சார்பில் அவரது மகள் டாக்டர் நித்யா ராவ், பாரத ரத்னா விருதைப் பெற்றுக்கொண்டார்.

*கர்பூரி தாக்கூர் (மரணத்திற்குப் பிந்தைய விருது). மறைந்த கர்பூரி தாக்கூர் சார்பில், அவரது மகன் திரு ராம்நாத் தாக்கூர் பாரத ரத்னா விருதைப் பெற்றுக்கொண்டார்.

***

ANU/AD/PLM/DL



(Release ID: 2016707) Visitor Counter : 105