தேர்தல் ஆணையம்

வில்வித்தை வீராங்கனையும், அர்ஜுனா விருது பெற்றவருமான செல்வி ஷீத்தல் தேவி தேர்தல் ஆணையத்தின் தேசிய மாற்றுத்திறனாளிகள் அடையாளமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்


இந்திய காது கேளாதோர் கிரிக்கெட் சங்கம் (ஐடிசிஏ) மற்றும் தில்லி மாவட்ட கிரிக்கெட் சங்கம் (டிடிசிஏ) ஆகியவற்றுக்கு இடையே, அனைவரையும் உள்ளடக்கிய தேர்தல் என்பதை மையமாகக் கொண்டு கிரிக்கெட் போட்டி நடைபெற்றது

மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்கான வாக்காளர் வழிகாட்டி வெளியிடப்பட்டது

Posted On: 17 MAR 2024 4:31PM by PIB Chennai

முதன்முறையாக, இந்திய தேர்தல் ஆணையம் (இசிஐ), இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துடன் (பிசிசிஐ) இணைந்து, இந்திய காது கேளாதோர் கிரிக்கெட் சங்க (ஐடிசிஏ) அணி மற்றும் தில்லி மாவட்ட கிரிக்கெட் சங்க (டிடிசிஏ) அணிகளுக்கு இடையே கிரிக்கெட் போட்டியை நடத்தியது.  வாக்காளர் விழிப்புணர்வு மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய  தேர்தல் என்ற நோக்கத்துடன் இந்த விளம்பர கண்காட்சி கிரிக்கெட் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த போட்டி நேற்று (மார்ச் 16, 2024) புது தில்லியில் உள்ள கர்னைல் சிங் மைதானத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், புகழ்பெற்ற பாரா வில்வித்தை வீராங்கனையும், அர்ஜுனா விருது பெற்றவருமான செல்வி ஷீத்தல் தேவி மாற்றுத்திறனாளிகள் பிரிவில் தேர்தல் ஆணையத்தின் தேசிய அடையாளமாக அறிவிக்கப்பட்டார்.

இந்த நிகழ்ச்சியில் தலைமைத் தேர்தல் ஆணையர் திரு ராஜீவ் குமார், தேர்தல் ஆணையர்கள் திரு ஞானேஷ் குமார் மற்றும் திரு சுக்பீர் சிங் சந்து ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணியை வாழ்த்தினர். டிடிசிஏ மற்றும் ஐடிசிஏ பிரதிநிதிகள் இதில் பங்கேற்றனர். முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் நிகில் சோப்ராவும் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டார்.

நிகழ்ச்சியின் போது, மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்கள் வாக்காளர்களுக்கான பிரத்யேக வாக்காளர் வழிகாட்டியை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. வாக்குச் சாவடிகளில் உள்கட்டமைப்பு வசதிகள், தகவல் மற்றும் நடைமுறை விவரங்கள் உட்பட மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்கான அத்தியாவசிய ஏற்பாடுகள் குறித்து இதில் இடம்பெற்றுள்ளது.

மாற்றுத்திறனாளிகளுக்காக தேர்தல் ஆணையம் மேற்கொள்ளும் முக்கிய முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இத்தகைய முயற்சிகள் வரவிருக்கும் பொதுத் தேர்தல்களில் வாக்காளர்களின் பங்களிப்பை, குறிப்பாக மாற்றுத்திறனாளிகளிடையே கணிசமாக அதிகரிக்கும் என்று தேர்தல் ஆணையம் நம்பிக்கை கொண்டுள்ளது.

இந்திய சைகை மொழி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையத்தின் (ஐஎஸ்எல்ஆர்டிசி) மாணவர்களால் சைகை மொழியில் தேசிய கீதம் பாடப்பட்டு நிகழ்ச்சி நிறைவடைந்தது.

***

ANU/AD/PLM/DL



(Release ID: 2015325) Visitor Counter : 83