பிரதமர் அலுவலகம்
லக்கிசராய் சாலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
21 FEB 2024 12:37PM by PIB Chennai
பீகாரில் லக்கிசராய் சாலை விபத்தில் ஏற்பட்ட உயிர் இழப்பிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாக அவர் கூறியுள்ளார்.
இதுகுறித்து பிரதமர் அலுவலகம் சமூக ஊடக எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
"பீகார் மாநிலம் லக்கிசராய் பகுதியில் ஏற்பட்ட சாலை விபத்து மிகவும் துயரமானது. இந்த விபத்தில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். மாநில அரசின் மேற்பார்வையில் உள்ளூர் நிர்வாகம் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளையும் வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ளது"
***
Release ID: 2007607
ANU/PKV/PLM/RS/KRS
(வெளியீட்டு அடையாள எண்: 2007692)
வருகையாளர் எண்ணிக்கை : 123
இந்த வெளியீட்டை படிக்க:
Kannada
,
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Assamese
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Malayalam