பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

நமது கல்வி நிறுவனங்களின் சர்வதேசமயமாக்கல் இலக்குகளை அடைய மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது: பிரதமர்

இடுகை இடப்பட்ட நாள்: 13 FEB 2024 12:36PM by PIB Chennai

மத்திய கல்வித்துறை அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் எழுதியுள்ள கட்டுரையைப் பிரதமர் திரு நரேந்திமோடி இன்று தமது எக்ஸ் பதிவில் பகிர்ந்து கொண்டுள்ளார்.

தேசிய கல்விக் கொள்கையில் குறிப்பிடப்பட்டுள்ளபடி நமது கல்வி நிறுவனங்களின் சர்வதேசமயமாக்கல் இலக்குகளை அடைய தது அரசு உறுதிபூண்டுள்ளது என்றும் அவர்  தெரிவித்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது:

"புதிய கல்விக் கொள்கையின் கீழ் சுட்டிக்காட்டப்பட்டுள்ளபடி, நமது கல்வி நிறுவனங்களுக்கான சர்வதேசமயமாக்கல் இலக்குகளை மேற்கொள்ள மது அரசு உறுதிபூண்டுள்ளது. ஐ.ஐ.டி-தில்லி-அபுதாபி வளாகம் மற்றும் ஐ.ஐ.டி-சென்னை- சான்சிபார் வளாகம் ஆகியவை இந்த உறுதிப்பாட்டை சுட்டிக் காட்டுகின்றன. மத்திய கல்வித்துறை அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் இந்த உணர்வை தனது கட்டுரையில் வெளிப்படுத்துகிறார்.

***

(Release ID: 2005499)

ANU/SMB/BS/AG/RR


(வெளியீட்டு அடையாள எண்: 2005522) வருகையாளர் எண்ணிக்கை : 188