பிரதமர் அலுவலகம்

பிரான்ஸ் நாட்டின் செர்ஜியில் உள்ள திருவள்ளுவர் சிலை, பிரான்ஸ் மற்றும் இந்தியா இடையேயான கலாச்சார பிணைப்புக்கு ஒரு அழகான சான்றாகும்: பிரதமர்

Posted On: 10 DEC 2023 8:10PM by PIB Chennai

பிரான்ஸ் நாட்டின் செர்ஜியில் உள்ள திருவள்ளுவர் சிலை, பிரான்ஸ் மற்றும் இந்தியா இடையேயான கலாச்சார பிணைப்புக்கு ஒரு அழகான சான்றாகும் என்று பிரதமர் திரு. நரேந்திர மோடி கூறினார்.

பிரான்ஸ் நாட்டின் செர்ஜி நகரில் திருவள்ளுவர் சிலை திறப்பு விழா குறித்து மேயர் திரு ஜீன்- பால் ஜீன்டன் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திரு ஜீன்-பால் ஜெண்டனின் இடுகைக்கு பதிலத்து பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:

“பிரான்சின் செர்ஜியில் உள்ள திருவள்ளுவர் சிலை, நமது கலாச்சாரப் பிணைப்புகளுக்கு அழகான ஒரு சான்றாகும். திருவள்ளுவர் ஞானம் மற்றும் அறிவின் அடையாளமாக உயர்ந்து நிற்கிறார். அவரது எழுத்துக்கள் உலகம் முழுவதும் உள்ள லட்சக் கணக்கானவர்களை ஊக்குவிக்கின்றன..”

*******


ANU/PKV/RB/DL



(Release ID: 1990048) Visitor Counter : 56