பிரதமர் அலுவலகம்

வி.பி.எஸ்.ஒய் யாத்திரை காலத்தில் ஒரு கோடி ஆயுஷ்மான் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாக பிரதமர் பாராட்டு

Posted On: 23 DEC 2023 10:10AM by PIB Chennai

தற்போது நடைபெற்று வரும்  வளர்ச்சியடைந்த பாரதம் லட்சிய  யாத்திரையின் போது, ஒரு  கோடி ஆயுஷ்மான் அட்டைகள் வழங்கப்பட்டதில் பிரதமர் திரு. நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

இந்தச் சாதனையைப் பாராட்டிய பிரதமர் மோடி, அரசு திட்டங்களின் நன்மைகளை தகுதியான  அனைத்து குடிமக்களுக்கும் கொண்டு செல்வதே இந்த யாத்திரையின் நோக்கம் என்று கூறினார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:

"மிகவும் பரபரப்பான தகவல்! வளர்ச்சியடைந்த பாரதம் லட்சிய யாத்திரையின் நோக்கம் என்னவென்றால், எங்கள் திட்டங்களின் நன்மைகள் நாடு முழுவதும் உள்ள எனது ஏழை சகோதர சகோதரிகள் அனைவரையும் சென்றடைவதாகும்."

*******


ANU/PKV/DL



(Release ID: 1989838) Visitor Counter : 55