சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்

சில்க்யாரா சுரங்கம் இடிந்து விழுந்த இடத்தில் மீட்புப் பணிகள் தீவிரம்

Posted On: 21 NOV 2023 4:47PM by PIB Chennai

உயிர்களைக் காப்பாற்றுவதற்கான அவர்களின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பைத் தொடர்ந்து, உத்தரகாசியில் உள்ள சில்க்யாரா சுரங்க விபத்தில் சிக்கியுள்ள 41 தொழிலாளர்களை மீட்கும்  நடவடிக்கைகளில் அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

சுரங்கத்தின் 2 கி.மீ., பகுதி, தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் கான்கிரீட் கட்டமைப்பு, மீட்பு முயற்சிகளின் மையமாக உள்ளது. சுரங்கப்பாதையின்  இந்தப் பாதுகாப்பான பகுதியில், மின்சாரம் மற்றும் தண்ணீர் விநியோகம் செயல்பாட்டில் உள்ளது. உணவு மற்றும் மருந்துகள் உள்ளிட்ட பொருட்கள், 4 அங்குல கம்ப்ரசர் குழாய் மூலம் வழங்கப்படுகின்றன.

பல்வேறு அரசு அமைப்புகள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன, ஒவ்வொரு அமைப்புக்கும் தொழிலாளர்களைப் பாதுகாப்பாக வெளியேற்றுவதை உறுதி செய்வதற்காக குறிப்பிட்ட பணிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. சுரங்கத்தில் சிக்கியவர்களின் மன உறுதியை அதிகரிக்க அரசு தொடர்ந்து அவர்களுடனான தகவல் தொடர்புகளை பராமரிக்கிறது.

மீட்பு பணிகள் குறித்த முக்கிய தகவல்கள்:

தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகம் நிறுவனத்தின் முயற்சிகள்

 

அத்தியாவசியப் பொருட்களின் விநியோகத்திற்காக 6 அங்குல விட்டம் கொண்ட ஒரு கூடுதல் லைஃப்லைனுக்காக துளையிடும் பணியை என்.எச்..டி.சி.எல் நேற்று முடித்ததால் ஒரு குறிப்பிடத்தக்க திருப்பம் ஏற்பட்டது.

சிக்கித் தவிக்கும் தொழிலாளர்களுடன் வீடியோ தகவல் தொடர்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. காற்று மற்றும் நீர் அழுத்தத்தைப் பயன்படுத்தி குழாய்க்குள் உள்ள குப்பைகளை அகற்றுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

என்.எச்..டி.சி.எல் சில்க்யாரா முனையிலிருந்து கிடைமட்டமாகத் தோண்டும் பணி மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. இது ஆகூர் தோண்டும் எந்திரத்தைப் பயன்படுத்தி தொழிலாளர்களை மீட்கிறது.

துளையிடும் இயந்திரத்திற்கான பாதுகாப்புச் சாசனம் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. குழாயின் விட்டம் மற்றும் வெல்டிங் ஆகியவற்றில் மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன.

செங்குத்து மீட்புக்கான எஸ்.ஜே.வி.என்.எல் இயந்திரம் அந்த இடத்திற்கு வந்துள்ளது. தற்போது அந்த எந்திரத்தை நிறுவும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக குஜராத், ஒடிசா மாநிலங்களில் இருந்து இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டுள்ள.

ஏற்கனவே இரண்டு குண்டுகள் வெடிக்க வைக்கப்பட்டு சுரங்கம் தோண்டப்பட்டுள்ளது. இதன் விளைவாக 6.4 மீட்டர் வரை வழி ஏற்பட்டுள்ளதுஒரு நாளைக்கு மூன்று முறை குண்டுகள் வெடிக்க செய்யப்பட்டு  சுரங்கம் தோண்டும் பணி திட்டமிடப்பட்டுள்ளது.

தொழிலாளர்களை மீட்பதற்காக கிடைமட்ட துளையிடல் மூலம் நுண்ணிய -சுரங்கப்பாதைக்கான இயந்திரங்களை ரயில் விகாஸ் நிகாம் நிறுவனம் மூலம் ஒடிசாவில் இருந்து கொண்டு செல்லப்படுகிறது.

மும்பை மற்றும் காசியாபாதில் இருந்து .என்.ஜி.சி வாகனங்கள் துளையிடுவதற்காக கொண்டு வரப்படுகின்றன.

180 மீட்டர் முதல் 150 மீட்டர் வரை பாதுகாப்பான கால்வாய் அமைக்கப்பட்டு, சுரங்கப்பாதைக்குள் ஒரு சறுக்குவழியை உருவாக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இதற்காக ராணுவத்தினர் பெட்டிகளை குவித்து வருகின்றனர்.

எஸ்.ஜே.வி.என்.எல் நிறுவனத்தால் செங்குத்து துளையிடலுக்கான அணுகு சாலையை 48 மணி நேரத்திற்குள் எல்லை சாலைகள் அமைப்பு விரைவாக உருவாக்கியுள்ளது. .என்.ஜி.சி நிறுவனத்தால் புவியியல் ஆய்வுகள் நடத்தப்பட்டன.

பின்னணி:

நவம்பர் 12, 2023 அன்று, சில்க்யாராவுக்குப் பக்கத்தில் 60 மீட்டர் நீளத்தில் இடிபாடுகள் விழுந்ததால் சில்க்யாராவிலிருந்து பார்கோட் வரை அமைக்கப்பட்டு வரும் சுரங்கப்பாதையில் சரிவு ஏற்பட்டது. சிக்கித் தவித்த 41 தொழிலாளர்களை மீட்க மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கைளைத் தொடங்கின.

ஆரம்பத்தில் இடிபாடுகள் வழியாக 900 மிமீ குழாய் அமைக்கப்பட்டது. பாதுகாப்பாக மீட்பது குறித்த ஆலோசனையின் போது, ஒரே நேரத்தில் ல்வேறு மீட்பு முயற்சிகள் குறித்து  ஆராயப்பட்டது.  இடிபடாமல் உள்ள 8.5 மீட்டர் உயரமும், 2 கிலோ மீட்டர் நீளமும் கொண்ட சுரங்கப்பாதையின் கட்டமைக்கப்பட்டப் பகுதி, மின்சாரம் மற்றும் குடிநீர் விநியோகத்துடன் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பை வழங்குகிறது.

.என்.ஜி.சி, எஸ்.ஜே.வி.என்.எல், ஆர்.வி.என்.எல், என்.எச்..டி.சி.எல், டி.எச்.டி.சி.எல் ஆகிய ஐந்து முகமைகளுக்கு குறிப்பிட்ட பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளனஅவை இணைந்து செயல்படுகின்றன.

***

ANU/AD/BS/RS/KRS
(Release ID: 1978512)



(Release ID: 1978608) Visitor Counter : 66