பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்

மத்திய அரசு ஓய்வூதியதாரர்களின் 50 லட்சம் டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ்களை இலக்காகக் கொண்ட நாடு தழுவிய டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் இயக்கம் 2.0 நவம்பர் 1, 2023 அன்று தொடங்கப்பட்டது.

Posted On: 03 NOV 2023 12:29PM by PIB Chennai

மத்திய அரசு ஓய்வூதியதாரர்களின் 'வாழ்க்கையை எளிதாக்கும் வகையில்' ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியர் நலத் துறை டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ்  (டி.எல்.சி) அதாவது ஜீவன்பிரமானை பரவலாக ஊக்குவித்து வருகிறது. 2014 ஆம் ஆண்டில், பயோமெட்ரிக் சாதனங்களைப் பயன்படுத்தி, டி.எல்.சி.களை சமர்ப்பிக்கும் பணி தொடங்கப்பட்டது.அதைத் தொடர்ந்து, ஆதார் தரவுத்தளத்தை அடிப்படையாகக் கொண்ட முக அங்கீகார தொழில்நுட்ப அமைப்பை உருவாக்க மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய தனித்துவ அடையாள ஆணையத்துடன் இணைந்து  ஈடுபட்டது. இதன் மூலம் எந்தவொரு ஆண்ட்ராய்டு அடிப்படையிலான ஸ்மார்ட் தொலைபேசியிலிருந்தும் எல்.சி.யை சமர்ப்பிக்க முடியும். இந்த வசதியின்படி, முக அங்கீகார நுட்பங்கள் மூலம் ஒரு நபரின் அடையாளம் நிறுவப்பட்டு டி.எல்.சி உருவாக்கப்படுகிறது.நவம்பர் 2021 இல் தொடங்கப்பட்ட இந்தத் திருப்புமுனை தொழில்நுட்பம், ஓய்வூதியதாரர்கள் வெளிப்புற பயோ-மெட்ரிக் சாதனங்களை சார்ந்திருப்பதைக் குறைத்தது.  ஸ்மார்ட்போன் அடிப்படையிலான தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதன் மூலம் இந்தச் செயல்முறையை வெகுஜனங்களுக்கு மிகவும் அணுகக்கூடியதாகவும் மலிவானதாகவும் ஆக்கியது.

டிஜிட்டல் வாழ்க்கை சான்றிதழை சமர்ப்பிக்க டி.எல்.சி / முக அங்கீகார தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்காக அனைத்து மத்திய அரசு ஓய்வூதியதாரர்கள் மற்றும் ஓய்வூதிய வழங்கல் அதிகாரிகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியர் நலத் துறை 2022 நவம்பர் மாதத்தில் நாடு முழுவதும் 37 நகரங்களில் ஒரு பிரச்சாரத்தைத் தொடங்கியது. 35 லட்சத்துக்கும் மேற்பட்ட மத்திய அரசு ஓய்வூதியர்களுக்கான டி.எல்.சி.க்கள் வழங்கப்பட்டதன் மூலம் இந்த இயக்கம் பெரும் வெற்றி பெற்றது. 17 ஓய்வூதியம் வழங்கும் வங்கிகள், அமைச்சகங்கள், துறைகள், ஓய்வூதியர்கள் நலச்சங்கம், இந்திய தனித்துவ அடையாள ஆணையம்(யுஐடிஏஐ) , மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்,(எம்.இ.ஐ.டி.ஒய்) ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் 50 லட்சம் ஓய்வூதியதாரர்களை இலக்காகக் கொண்டு நாடு தழுவிய பிரச்சாரம் 2023 நவம்பர் 1 முதல் 30 வரை நாடு முழுவதும் 100 நகரங்களில் 500 இடங்களில் நடைபெறும்.

இது தொடர்பாக, பாரத ஸ்டேட் வங்கியுடன் இணைந்து, பெங்களூருவில், டி.எல்.சி., முகாம் நடத்தப்பட உள்ளது. ஐ.எஸ்.ஆர்.ஓ., நால் பெங்களூரு, யெல்ஹங்கா நியூ டவுன், விமானப்படை நிலையம் யெலஹங்கா, ஹெசர்கட்டா ஆகிய இடங்களிலும், விஜயநகர்-2, பசவேஸ்வரா, ஹனுமந்த்நகர், மல்லேஸ்வரம், ராஜாஜிநகர்-2 பிளாக் டி.பி.சி.டி.,யிலும், கனரா வங்கி சார்பில் முகாம் நடக்கிறது. ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியர் நலத் துறையின்  ஒரு குழுவும் முகாம்களில் கலந்து கொண்டு ஓய்வூதியதாரர்களுக்கு அவர்களின் ஆதார் பதிவேடுகளை தேவைப்படும் இடங்களில் புதுப்பிக்கவும்தொழில்நுட்ப சிக்கல்களைக் கவனித்துக் கொள்ளவும் உதவும்.

இது தொடர்பாக, வங்கி அதிகாரிகள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் கர்நாடக மத்திய அரசு ஓய்வூதியர்கள் சங்கம், கர்நாடகா தபால் மற்றும் தொலைத்தொடர்பு ஓய்வூதியர்கள் சங்கம் மற்றும் அகில இந்திய பிஎஸ்என்எல் ஓய்வூதியர்கள் நலச் சங்கம் ஆகிய மூன்று பதிவு செய்யப்பட்ட ஓய்வூதியர் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் இயக்க  முன்னேற்றத்தை ஆய்வு செய்வதற்காக ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியர் நலத் துறை செயலாளர் (ஓய்வூதியம்) ஸ்ரீ வி.ஸ்ரீனிவாஸ் தலைமையில் ஒரு குழு நவம்பர் 4ஆம் தேதி பெங்களூரு செல்கிறது.

ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியர் நலத் துறை இந்த இயக்கத்தை நாடு முழுவதும் மாபெரும் வெற்றி பெறச் செய்வதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும்.

****************

ANU/SMB/PKV/KV



(Release ID: 1974507) Visitor Counter : 181