பிரதமர் அலுவலகம்
ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் கிளப் எறிதல்- எஃப் 51 பிரிவில் அமித் சரோஹா வெண்கலப் பதக்கம் வென்றதைப் பிரதமர் கொண்டாடினார்
Posted On:
23 OCT 2023 5:22PM by PIB Chennai
சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்று வரும் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டி 2022-ல் கிளப் எறிதல் - எஃப்51 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற அமித் சரோஹாவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது:
"ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் கிளப் எறிதலில் (எஃப் 51) வெண்கலப் பதக்கம் வென்ற அமித் சரோஹாவுக்கு வாழ்த்துகள். அவரது அர்ப்பணிப்பும், அயராத உழைப்பும் நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளது. அவர் தமது அபாரமான திறமைகள் மற்றும் உத்வேகத்தால் தொடர்ந்து பலரை ஊக்குவிக்கட்டும்"
--------
(Release ID: 1970117)
ANU/AD/IR/RS/KRS
(Release ID: 1970260)
Visitor Counter : 87
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam