பிரதமர் அலுவலகம்

மகளிர் இடஒதுக்கீட்டுச் சட்டம் என்பது, பெண்கள் நமது தேசத்தை வழிநடத்துவதற்கான அழைப்பு: பிரதமர்

Posted On: 16 OCT 2023 4:03PM by PIB Chennai

நாட்டில் பெண்களுக்கு அதிகாரமளிக்கும் மகளிர் இடஒதுக்கீட்டுச் சட்டத்தின் முக்கியத்துவத்தைப் பிரதமர் திரு நரேந்திர மோடி சுட்டிக்காட்டியுள்ளார்.

நாரி சக்தி வந்தன் அதினியம் எனப்படும் மகளிர் இடஒதுக்கீட்டுச் சட்டம் குறித்து மத்திய அமைச்சர் திரு ஜி. கிஷன் ரெட்டி எழுதிய கட்டுரை தொடர்பாகப் பிரதமர் அலுவலகம், சமூக ஊடக எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:

"அண்மையில் நிறைவேற்றப்பட்ட மகளிர் இடஒதுக்கீட்டு மசோதா  பெண்களுக்கு அதிகாரமளித்தலின் அடையாளமாகவும், நமது தேசத்தை ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கி வழிநடத்த பெண்களுக்கு அழைப்பு விடுக்கும் வகையிலும் எவ்வாறு திகழ்கிறது என்பதை மத்திய அமைச்சர் திரு கிஷன் ரெட்டி (@kishanreddybjp) எழுதியுள்ளார்.

***

SMB/ANU/PLM/RS/KPG



(Release ID: 1968176) Visitor Counter : 115