பிரதமர் அலுவலகம்
மகளிர் இடஒதுக்கீட்டுச் சட்டம், கொள்கை வகுப்பதில் சமச்சீர் சூழலை உருவாக்கும்: பிரதமர்
प्रविष्टि तिथि:
13 OCT 2023 5:07PM by PIB Chennai
மகளிர் இடஒதுக்கீட்டுச் சட்டம் ஒட்டுமொத்த அளவில் மகளிருக்கான மரியாதையை வலுப்படுத்தும் என்றும், கொள்கைகளை உருவாக்குவதற்கான சிறந்த சூழ்நிலையை ஏற்படுத்தும் என்றும் பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார்.
மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு அர்ஜூன் ராம் மேக்வால், சமூக ஊடக எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவைப் பகிர்ந்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;
“மகளிர் இடஒதுக்கீட்டுச் சட்டம் குறித்து மத்திய அமைச்சர் திரு அர்ஜூன் ராம் மேக்வால் கட்டுரை எழுதியுள்ளார். சட்டம் இயற்றும் அமைப்புகளில், மகளிர் இடஒதுக்கீட்டுச் சட்டம் பெண்களின் மரியாதையை முழுமையான முறையில் வலுப்படுத்தும். சீரான கொள்கை உருவாக்கத்திற்கான சிறந்த சூழ்நிலையை உருவாக்கும். ”
***
(Release ID: 1967403)
ANU/SMB/PLM/KPG/KRS
(रिलीज़ आईडी: 1967463)
आगंतुक पटल : 140
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam