பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

மும்பை கோரேகான் தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் இரங்கல்


பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து உதவித் தொகை அறிவிப்பு

இடுகை இடப்பட்ட நாள்: 06 OCT 2023 12:50PM by PIB Chennai

மும்பை கோரேகானில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என பிரதமர் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள சமூக ஊடக எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது;

"மும்பை கோரேகானில் ஏற்பட்ட தீ விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்பு வேதனை அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துகொள்கின்றேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து ரூ.2 லட்சம் வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும்.”

***

ANU/PKV/BS/AG/KV


(வெளியீட்டு அடையாள எண்: 1964963) வருகையாளர் எண்ணிக்கை : 175