பிரதமர் அலுவலகம்
விஸ்வகர்மா ஜெயந்தியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் வாழ்த்து
இடுகை இடப்பட்ட நாள்:
17 SEP 2023 9:27AM by PIB Chennai
விஸ்வகர்மா ஜெயந்தியை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அர்ப்பணிப்பு, திறமை மற்றும் கடின உழைப்பால் சமூகத்தில் புதுமைகளை முன்னெடுத்துச் செல்லும் அனைத்து கைவினைஞர்கள் மற்றும் படைப்பாளிகளை அவர் வணங்கினார்.
எக்ஸ் சமூக ஊடக தளத்தில் பிரதமர் கூறியிருப்பதாவது:
“விஸ்வகர்மாவின் பிறந்தநாளை முன்னிட்டு எனது குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள். அர்ப்பணிப்பு, திறமை மற்றும் கடின உழைப்பால் சமூகத்தின் மறுசீரமைப்பை முன்னெடுத்துச் சென்றுள்ள அனைத்து கைவினைஞர்கள் மற்றும் படைப்பாளிகளை இந்தத் தருணத்தில் நான் மனதார வணங்குகிறேன்."
***
AP/BR/KRS
(வெளியீட்டு அடையாள எண்: 1958107)
வருகையாளர் எண்ணிக்கை : 214
இந்த வெளியீட்டை படிக்க:
Assamese
,
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam