பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

உத்தரபிரதேச மாநிலம் ஜான்சியில் நீர் சேமிப்பு மற்றும் நிலத்தடி நீர்மட்டத்தை அதிகரிப்பதற்கான முயற்சிகளை பிரதமர் பாராட்டினார்.

प्रविष्टि तिथि: 05 SEP 2023 8:18PM by PIB Chennai

உத்திரபிரதேச மாநிலம் ஜான்சியில் நீர் சேமிப்பு மற்றும் நிலத்தடி நீர்மட்டத்தை அதிகரிப்பதற்கு பொதுமக்கள் பங்கேற்பு மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகளை பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டியுள்ளார் இந்த உன்னதப் பணியில் ஈடுபட்ட அனைவருக்கும் பிரதமர் திரு. மோடி வாழ்த்து தெரிவித்தார்

 

அழிந்து வரும் நதிகளின் மறுமலர்ச்சி மற்றும் தொகுதியில் பல்வேறு அமிர்த நீர்நிலைகளைக் கட்டுவது குறித்து ஜான்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சமூக ஊடக எக்ஸ் பதிவுகளுக்கு பதிலளித்து பிரதமர் திரு.நரேந்திர மோடி, கூறியிருப்பதாவது “உத்திரபிரதேச மாநிலம் ஜான்சியில் நீர் சேமிப்பு மற்றும் நிலத்தடி நீர்மட்டத்தை அதிகரிப்பதற்கான இந்த பொதுமக்களின் பங்கேற்பு முயற்சிகளின் வெற்றி மிகவும் ஊக்கமளிக்கும் மற்றும் முழு நாட்டிற்கும் ஒரு எடுத்துக்காட்டு. இந்த உன்னதப் பணியில் ஈடுபட்ட அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்!” என்று கூறியுள்ளார்.

(வெளியீட்டு ஐடி: 1954963)

 

AD/BS/KRS


(रिलीज़ आईडी: 1955005) आगंतुक पटल : 182
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Assamese , Manipuri , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam