குடியரசுத் தலைவர் செயலகம்

நான்கு நாடுகளின் தூதர்கள் குடியரசுத் தலைவரிடம் நியமனப் பத்திரங்களை சமர்ப்பித்தனர்

Posted On: 29 AUG 2023 1:39PM by PIB Chennai

குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று (ஆகஸ்ட் 29, 2023) நடைபெற்ற நிகழ்வில் எஸ்தோனியா, உக்ரைன், புர்கினா பாசோ, நார்வே ஆகிய நாடுகளின் தூதர்களிடமிருந்து குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு நியமனப் பத்திரங்களைப் பெற்றுக் கொண்டார். தங்களின் நியமனப் பத்திரங்களை சமர்ப்பித்தவர்களின் விவரம்:

1.   மேதகு திருமதி மார்ஜே லூப், எஸ்தோனியா குடியரசின் தூதர்

2.   டாக்டர் அலெக்சாண்டர் போலிஷூக், உக்ரைன் தூதர்

3.   டாக்டர் டிசைர் போனிஃபேஸ் சோம், புர்கினா பாசோவின் தூதர்

4.   மேதகு திருமதி மே-எலின் ஸ்டெனர், நார்வே தூதர்

***

 

ANU/AP/SMB/AG



(Release ID: 1953239) Visitor Counter : 115