பிரதமர் அலுவலகம்

மிசோரமில் நிகழ்ந்த பாலம் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் இரங்கல்


பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் அறிவிப்பு

Posted On: 23 AUG 2023 12:45PM by PIB Chennai

மிசோரமில் நிகழ்ந்த பாலம் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000மும் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் என்று பிரதமர் அறிவித்துள்ளார்.

இது குறித்து பிரதமர் அலுவலகம் சமூக ஊடக எக்ஸ் தளத்தில்  கூறியிருப்பதாவது;

"மிசோரமில் நிகழ்ந்த பாலம் விபத்து வேதனை அளிக்கிறது. தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு இரங்கல். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது, பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளும் செய்யப்பட்டு வருகின்றன.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து ரூ. 2 லட்சம் வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும்: பிரதமர் @narendramodi

***

 

ANU/AD/IR/AG/GK



(Release ID: 1951339) Visitor Counter : 110