பிரதமர் அலுவலகம்
ராஜஸ்தானின் ஜூன்ஜூனுவில் நிகழ்ந்த டிராக்டர் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் இரங்கல்
प्रविष्टि तिथि:
29 MAY 2023 11:10PM by PIB Chennai
ராஜஸ்தான் மாநிலம் ஜூன்ஜூனுவில் நிகழ்ந்த டிராக்டர் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து நிதியுதவி வழங்கப்படும் எனவும் பிரதமர் திரு நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
இது குறித்து பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
“ராஜஸ்தான் மாநிலம் ஜூன்ஜூனுவில் டிராக்டர் விபத்து நிகழ்ந்தது அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதுடன், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன். விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு, பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் அளிக்கப்படும்: பிரதமர்“
******
(Release ID: 1928177)
AD/ES/MA/KRS
(रिलीज़ आईडी: 1928543)
आगंतुक पटल : 129
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam