பிரதமர் அலுவலகம்

மத்திய அரசின் ஒன்பது ஆண்டுகாலப் பணிகள் குறித்த கட்டுரைகளைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்

Posted On: 30 MAY 2023 2:21PM by PIB Chennai

மத்திய அரசின் ஒன்பது ஆண்டுகாலப் பணிகள் குறித்த கட்டுரைகளைப் பிரதமர் திரு நரேந்திர மோடி ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

இது குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

“ஒன்பது ஆண்டுகால நம்பிக்கை, எதிர்பார்ப்பு மற்றும் விசுவாசம்: முன்னாள் குடியரசுத்தலைவர் திரு ராம்நாத் கோவிந்த்”

மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமனின் ட்விட்டர் பதிவை பிரதமர் அலுவலகம் பகிர்ந்துள்ளது:-

”மாற்றத்திற்கான சவால்களை மத்திய அரசு எவ்வாறு வெற்றிகரமாக முறியடித்தது என்பது குறித்து நிர்மலா சீதாராமன் விளக்கியுள்ளார்”

மத்திய வெளியுறவு அமைச்சர் டாக்டர் எஸ் ஜெய்சங்கரின் ட்விட்டர் பதிவை பிரதமர் அலுவலகம் பகிர்ந்துள்ளது:-

“கட்டாயம் படிக்கவும்! இந்தியா ஒரு பொறுப்புமிக்க வளர்ச்சிக் கூட்டாளியாகவும், உலகளாவிய தெற்கு நாடுகளின் குரலாகவும், இக்கட்டான காலங்களில்  உதவ முன்வரும் முதல் நாடாகவும் திகழ்கிறது: மத்திய வெளியுறவு அமைச்சர் டாக்டர் எஸ் ஜெய்சங்கர்.”

******

(Release ID: 1928255)

AD/ES/MA/KRS



(Release ID: 1928276) Visitor Counter : 138