பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்

மாணவிகள், பெண் ஆசிரியர்கள், மகளிர் சமூக ஆர்வலர்களுக்கான பயிற்சித் திட்டங்களுக்கு மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் விண்ணப்பங்களை வரவேற்கிறது

Posted On: 26 MAY 2023 2:31PM by PIB Chennai

மாணவிகள், பெண் ஆசிரியர்கள், மகளிர் சமூக ஆர்வலர்களுக்கான பயிற்சித் திட்டங்களுக்கு மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் விண்ணப்பங்களை வரவேற்கிறது. முதல் நிலை நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களைச் சேர்ந்த மகளிருக்காக நடத்தப்படும் இந்தப் பயிற்சித் திட்டம் 03.07.2023 முதல் 31.08.2023 வரை இரண்டு மாதங்கள் நடத்தப்பட உள்ளது. இந்தப் பயிற்சி திட்டத்தில் சேர விரும்புவோர் ஏதேனும் ஒரு பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனத்தில் படிப்பவராகவோ அல்லது பணியாற்றுபவராக இருக்க வேண்டும்.

21 வயது முதல் 40 வயது வரையிலானவர்கள் இதில் சேர விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதத்திற்கு ரூபாய் 20,000 ஊக்கத்தொகை வழங்கப்படும். தில்லியில் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். தேர்வு செய்யப்படுபவர்கள், பயிற்சியில் கலந்து கொள்ள தில்லி சென்று வருவதற்கான மூன்றாம் வகுப்பு குளிர்சாதன வசதி ரயில் கட்டணங்கள் வழங்கப்படும்.

மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் முக்கியத் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் தொடர்பான ஆய்வுகள் குறித்து இந்தப் பயிற்சித் திட்டம் நடத்தப்படுகிறது.

இதில் சேர விரும்புவர்கள் https://docs.google.com/forms/d/1UWK5W_07pRxL8yekBy6DbjAg225Vd_WJwfnc4nReTU/viewform?edit_requested=true என்ற இணையதள இணைப்பின் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை 29.05.2023 இரவு மணி 11.59 க்குள் சமர்பிக்க வேண்டும்.     

 

******

AD/PLM/MA/KPG



(Release ID: 1927532) Visitor Counter : 234