ஊரக வளர்ச்சி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

அமிர்த நீர்நிலை இயக்கத்தின் செயலாக்கம் மற்றும் கண்காணிப்பை ஆய்வு செய்வதற்கான உயர்நிலைக் குழுக் கூட்டத்திற்கு ஊரக மேம்பாட்டுத்துறை செயலாளர் திரு ஷைலேஷ் குமார் சிங் தலைமை வகித்தார்

प्रविष्टि तिथि: 17 MAY 2023 3:25PM by PIB Chennai

அமிர்த நீர்நிலை இயக்கத்தின் செயலாக்கம் மற்றும் கண்காணிப்பை ஆய்வு செய்வதற்காக நேற்று நடைபெற்ற உயர்நிலைக் குழுக் கூட்டத்திற்கு  ஊரக மேம்பாட்டுத்துறை செயலாளர் திரு ஷைலேஷ் குமார் சிங் தலைமை வகித்தார்.

இக்கூட்டத்தில் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் கூடுதல் தலைமைச் செயலாளர், முதன்மைச் செயலாளர், ஊரக மேம்பாட்டுத்துறை செயலாளர், அமிர்த நீர்நிலை இயக்கத்திற்கான மாநில பொறுப்பு அதிகாரி, மாவட்ட பொறுப்பு அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய ஊரக மேம்பாட்டுத்துறை செயலாளர்,  நிறைவடைந்த அமிர்த நீர்நிலைகளின் நீடித்த தன்மையை உறுதி செய்வது குறித்து அனைவரும் இறுதி பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார். மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பாக 2023, ஜூன் 10-ம் தேதிக்குள் நிறைவடைந்த அமிர்த நீர்நிலைகளை நேரடியாக ஆய்வு செய்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை அவர் கேட்டுகொண்டார்.

******

AP/IR/AG/KRS


(रिलीज़ आईडी: 1924863) आगंतुक पटल : 199
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Bengali , Manipuri , Punjabi , Telugu