கப்பல் போக்குவரத்து அமைச்சகம்

மத்திய அமைச்சர் திரு.சர்பானந்தா சோனோவால், ‘ஹரித் சாகர்’ பசுமை துறைமுக வழிகாட்டுதல்கள் 2023-ஐ அறிமுகப்படுத்தினார்

Posted On: 10 MAY 2023 4:18PM by PIB Chennai

ஜீரோ கார்பன் உமிழ்வு என்ற இலக்கை அடைவதற்காக, மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிகள் அமைச்சகம் ‘ஹரித் சாகர்’ பசுமை துறைமுக வழிகாட்டுதல்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வழிகாட்டுதல்களை மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் மற்றும் ஆயுஷ் துறை அமைச்சர் திரு. சர்பானந்தா சோனோவால் புது தில்லியில் வெளியிட்டார்.

 

ஹரித் சாகர் வழிகாட்டுதல்கள் - 2023, துறைமுக மேம்பாடு, செயல்பாடு மற்றும் பராமரிப்பு ஆகியவற்றில் இயற்கையுடன் இணைந்து பணிபுரிவதை ஊக்குவிக்கிறது. மேலும், துறைமுக செயல்பாட்டில் சுத்தமான/பசுமை ஆற்றலைப் பயன்படுத்துவதற்கு முக்கியத்துவம் அளிக்கிறது. இந்நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் திரு.சர்பானந்தா சோனோவால் பேசுகையில், "ஹரித் சாகர்" வழிகாட்டுதல்கள் -2023 முக்கிய துறைமுகங்களுக்கு ஒரு விரிவான கட்டமைப்பை வழங்குகிறது. வரையறுக்கப்பட்ட காலக்கெடுவை விட கார்பன் உமிழ்வை இன்னும் குறைப்பதை நோக்கமாகக் கொண்ட ஒரு விரிவான செயல் திட்டத்தை உருவாக்க அதிகாரம் அளிக்கிறது” என்றார்.

மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்துத்துறை செயலாளர் திரு.சுதன்ஷ் பந்த் கூறுகையில், 'எங்கள் நான்கு முக்கிய துறைமுகங்களான தீனதயாள் துறைமுகம், விசாகப்பட்டினம் துறைமுகம், புதிய மங்களூர் துறைமுகம் மற்றும் வ.உ.சிதம்பரனார் துறைமுகம் ஆகியவை ஏற்கனவே தேவையை விட அதிக அளவில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை உற்பத்தி செய்து வருகின்றன’ என்றார்.

துறைமுக செயல்பாடுகளில் இருந்து கழிவு வெளியேற்றத்தை பூஜ்ஜியமாக்குவதும், மறுசுழற்சியை அதிகரிப்பதும் இந்த வழிகாட்டுதல்களின் நோக்கமாகும். 2022-23-ம் நிதியாண்டின் போது, செயல்பாட்டு மற்றும் நிதி அளவுருக்களில் சிறந்த செயல்திறனுக்காக பெரிய துறைமுகங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. மேலும் அவை 2022-23-ம் ஆண்டில் ஒட்டுமொத்த செயல்திறனின் அடிப்படையில் துறைமுகங்கள் தரவரிசைப்படுத்தப்பட்டன. முக்கிய துறைமுகங்களுக்கிடையில் நியாயமான மற்றும் ஆரோக்கியமான போட்டியை உருவாக்கி, வரும் ஆண்டில் சிறப்பாகவும் சிறப்பாகவும் செயல்பட ஊக்குவிப்பதே இதன் நோக்கமாகும்.

2022-23 ஆம் ஆண்டில் கப்பல்கள் துறைமுகத்தில் நுழைவதற்கு முன் காத்திருக்க வேண்டிய நேரம் குறைவாக இருந்ததற்காக காமராஜர் துறைமுகம் விருது பெற்றது. முழுமையான செயல்திறனுக்கான விருது, 137.56 மில்லியன் மெட்ரிக் டன் சரக்குகளைக் கையாண்டதற்காக காண்ட்லாவின் தீனதயாள் துறைமுகத்திற்கு வழங்கப்பட்டது.

----

AD/CR/KPG

 

 

 

 



(Release ID: 1923230) Visitor Counter : 211