பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

மத்தியப்பிரதேசத்தின் கார்கோனில் நிகழ்ந்த சாலை விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்பிற்கு பிரதமர் இரங்கல்


பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து உதவித்தொகை அறிவிப்பு

प्रविष्टि तिथि: 09 MAY 2023 11:39AM by PIB Chennai

மத்தியப்பிரதேசத்தின் கார்கோனில் நிகழ்ந்த சாலை விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்பிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டுள்ளார். விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து நிவாரணத் தொகை வழங்கவும் திரு மோடி உத்தரவிட்டுள்ளார்.

பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,

“கார்கோனில் நிகழ்ந்த சாலை விபத்தை அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன். விபத்தில் தங்களது அன்பிற்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் விழைகிறேன். மாநில அரசின் கண்காணிப்பின் கீழ் தேவையான அனைத்து உதவிகளையும் உள்ளூர் நிர்வாகம் செய்து வருகிறது: பிரதமர் @narendramodi”.

“மத்தியப்பிரதேசத்தின் கார்கோனில் நிகழ்ந்த பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 2 லட்சம் நிவாரணத் தொகையாக வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50,000 வழங்கப்படும்: பிரதமர்”, என்று கூறப்பட்டுள்ளது.

***

AD/IR/AG/RR


(रिलीज़ आईडी: 1922765) आगंतुक पटल : 184
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Manipuri , Assamese , Bengali , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam